சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் இருவரும் போலீசார் தாக்கியதால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் பல நாட்களுக்குப் பிறகு தனது கண்டனத்தை பதிவிட்டு உள்ளார்.
ரஜினிகாந்த் ட்வீட்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், அரசு அனுமதித்த நேரத்தை விட சிறிது நேரம் கூடுதலாக கடையை திறந்து வைத்திருந்ததற்காக ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசார் விடிய விடிய லத்தியால் கொடூரமாக தாக்கி பின்னர் கிளைச்சிறையில் இருவரையும் அடைத்துள்ளனர். பின்பு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் தாக்கியதில் தான் இருவரும் உயிரிழந்தது மாஜிஸ்திரேட் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அக்காவல்நிலையத்தில் பணியாற்றும் ரேவதி எனும் பெண் காவலரும் சாட்சி அளித்துள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு – சிபிசிஐடி விசாரணை தொடங்கியது..!
தற்போது இவ்வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கி உள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த பொழுது சினிமா துறையை சேர்ந்தவர்கள் பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். தற்போது பல நாட்கள் கழித்து நடிகர் ரஜினிகாந்த் இந்த சம்பவம் தொடர்பாக பதிவிட்டு உள்ளார். அதில், “தந்தையும், மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது” #சத்தியமா விடவே கூடாது என பதிவிட்டு உள்ளார்.