மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணிநீக்கம் அறிவிப்பு
அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் மைக்ரோசாப்ட். இந்த நிறுவனம் மென்பொருள் தயாரிப்பு, விண்டோஸ் இயக்கம், மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பு உள்ளிட்ட சேவைகளை பயனர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில், கணினி தொழில்நுட்ப உலகில் முன்னோடியாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
ஜீ தமிழுக்கு தாவும் விஜய் டிவி சீரியல் நடிகர் செந்தில்….,புதிய தொடரில் அறிமுகம்……,
அதாவது, உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. இந்த வரிசையில், புதிதாக 559 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.