ஜீ தமிழுக்கு தாவும் விஜய் டிவி சீரியல் நடிகர் செந்தில்….,புதிய தொடரில் அறிமுகம்……,

0
ஜீ தமிழுக்கு தாவும் விஜய் டிவி சீரியல் நடிகர் செந்தில்....,புதிய தொடரில் அறிமுகம்......,
ஜீ தமிழுக்கு தாவும் விஜய் டிவி சீரியல் நடிகர் செந்தில்....,புதிய தொடரில் அறிமுகம்......,

‘சரவணன் மீனாட்சி’ சீரியல் புகழ் செந்தில் புதிய சீரியல் ஒன்றின் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய சீரியல்

தமிழ் சின்னத்திரையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சீரியல் ‘சரவணன் மீனாட்சி’. இத்தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகர் செந்தில். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த ‘சரவணன் மீனாட்சி’ தொடருக்குப் பிறகு ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலின் 2 பாகங்களில் நடித்திருந்தார் செந்தில்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த சீரியல் முடிந்து பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், மீண்டுமாக புதிய சீரியல் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் இவர். அதாவது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தயாரிக்கப்பட்டு வரும் ‘அண்ணா’ என்ற புதிய சீரியலில் 4 தங்கைகளுக்கு அண்ணனாக நடிக்க இருக்கிறார் செந்தில். இந்த சீரியலில் செந்திலுக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகை நித்யாராம் களமிறங்குகிறார்.

‘பத்து தல’ திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து….., காரணம் இது தான்?

மேலும், செந்திலின் 4 தங்கைகளில் ஒருவராக ‘பாக்கியலட்சுமி’ புகழ் ரித்திகா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் ரொசாரியோவும் இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here