பிரபல வெற்றிப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் விரைவில் இணைய இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் சூசக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதிய அப்டேட்
தமிழ் சினிமாவில் கத்தி, துப்பாக்கி, சர்க்கார், கஜினி, 7 ஆம் அறிவு போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் தற்போது புதிதாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ஆகஸ்ட் 16 – 1947’. இந்த திரைப்படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், புகழ் என பலர் நடித்துள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில் ஏற்படும் காதலை கருவாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இத்திரைப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த வகையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஆகஸ்ட் 16 – 1947’ படத்தின் ப்ரோமோஷன் விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் பேசிய அவர், ‘7 ஆம் அறிவு திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு ஸ்கிரிப்ட் எழுதினேன். ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தொகுப்பாளராக இருந்தேன்.
‘பொன்னியின் செல்வன் 2’ இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்….., படக்குழு அறிவிப்பு…,
அதே போல ‘மான் கராத்தே’ திரைப்படத்தில் ஹீரோ. ஆகஸ்ட் 16 – 1947 திரைப்படத்தில் விருந்தினராக வந்துள்ளேன். இன்னும் ஒன்று மட்டும் தான் பாக்கி’ என்று சூசகமான தகவலை கொடுத்துள்ளார். அதனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் தயாரிப்பு பணிகளில் ஈடுபடலாம் அல்லது மீண்டும் ஹீரோவாக நடிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.