சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது ஆதிரையின் திருமணம் கைகூடி வந்து விட்டது. ஜனனியும் அப்பத்தாவும் சாதித்து விட்டோம் என்ற திருப்தியில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல், ஒரு பக்கம் குணசேகரன் வேறு திட்டத்தில் இருக்கும் நிலையில், அதற்கு ஜனனி, அப்பத்தாவை ஏளனமாக பார்த்து கொண்டிருக்கிறார்.
ஜனனியை பற்றி கதிர் கேவலமாக பேசும்போது கூட, சக்தி சண்டைக்கு வந்தார். இருவரும் சண்டை கட்டி நாறும் போது கூட குணசேகரன் கண்டுகொள்ளவே இல்லை. மேலும், ஈஸ்வரிக்கு கல்லூரியில் வேலை கிடைத்துள்ள நிலையில், அதையும் மொத்தமாக மறைத்து விட்டனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விலகியதில் இருந்தே லக்கு தான்.., அடுத்த பரிமாணத்திற்கு உயர்ந்த காவியா!!
இந்நிலையில் இப்பொழுது முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஆதிரையின் திருமண விழா இந்த வாரத்திற்குள் நடைபெறுமாம். கடைசி நேரத்தில் அருணை கடத்தி வைத்து விட்டு வேறு வழியே இல்லாமல் கரிகாலனை திருமணம் செய்வதுபோல காட்டி விடலாம் என்று பிளான் போடுவாராம் குணசேகரன்.
ஆனால் அப்பத்தாவும் ஜனனியும் கடைசி நேரத்தில் பிளானை கண்டுபிடித்து அருணை காப்பாற்றி ஆதிரைக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்களாம். இதனால் குணசேகரன் அவமானத்தில் கூனி குறுகி நிற்பாராம்.