நடிகர் வைகை புயல் வடிவேலு மதுரையில் நடந்த புகைப்பட கண்காட்சியில் கலந்து கொண்ட போது அங்கிருந்த மாணவர்கள் செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
வைகை புயல் வடிவேலு
தென்னிந்திய தமிழ் சினிமாவில் மற்றவர்களிடம் அடிவாங்கி மக்களை சிரிக்க வைக்கும் நடிகர் என்றால் அது வைகை புயல் வடிவேலு தான். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கினார். இருப்பினும் அந்த படமும் சரியாக ஓடவில்லை. தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை தொடர்ந்து மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வந்த பாதைகளை வெளிக்காட்டும் விதமாக மதுரையில் அவரின் வாழ்க்கைப் பயண புகைப்படக் கண்காட்சி ஒன்றை திறந்து வைத்துள்ளனர். இந்த கண்காட்சியை பார்வையிட கல்லூரி மாணவ மாணவியர்கள் ஏகப்பட்டோர் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் வைகை புயல் வடிவேலும் பார்வையிட சென்றுள்ளார். அப்போது கண்காட்சி முகவாயிலில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் திரண்டு இருந்த நிலையில், வடிவேலுவை பார்த்தவுடன் ஆர்ப்பரிக்க தொடங்கினர். மேலும் கைதட்டி, கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram