டெல்லியில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகாத் ஜரீன் மற்றும் மணிஷா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
உலக குத்துச்சண்டை
மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், வெவ்வேறு எடைப் பிரிவுகளின் கீழ் பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதில் இந்தியா சார்பாக, நிகாத் ஜரீன், சாக்ஷி சவுத்ரி, லோவ்லினா உள்ளிட்ட 12 வீராங்கனைகள் பங்கு பெற்று உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவர்களில், நிகாத் ஜரீன் 50 கிலோ எடை பிரிவில், நடப்பு சாம்பியனான அல்ஜீரியாவின் பௌலாம் ரூமைசாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அல்ஜீரியா வீராங்கனையை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் நிகாத் ஜரீன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (ரவுண்டு 16) தகுதி பெற்றுள்ளார்.
IPL 2023: CSK அணியில் இணைந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்!!
இவர் இந்த ரவுண்டு 16-ல் மெக்சிகோவின் பாத்திமா ஹெர்ரேராவை எதிர்த்து போட்டியிட உள்ளார். இதே போன்று 57 எடை பிரிவுக்கான போட்டியில், இந்தியாவின் மணிஷா மவுன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டினா ரஹிமிக்கு எதிராக போட்டியிட்டார். இந்த போட்டியில் மணிஷா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம், இவரும் காலிறுதிக்கு, முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.