பிரபல பாடகி எல்.ஆர் ஈஸ்வரி புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை விமர்சித்து பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
பாடகி எல்.ஆர் ஈஸ்வரி
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிபி சுசீலா, ஜானகி அம்மா என கொடி கட்டி பறந்த 90ஸ் கால கட்டத்தில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி எல்.ஆர் ஈஸ்வரி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். கடைசியாக சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் இடம்பெற்ற “கலா சலா” பாட்டையும், ஆர் ஜே பாலாஜி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் “ஆடி குத்து” பாடலை பாடியிருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் தற்போதைய சினிமா வாழ்க்கை மற்றும் இப்போதைய பாடல்கள் குறித்து எல்.ஆர்.ஈஸ்வரி மனம் திறந்து பேசி உள்ளார். அவர், நான் கோரஸ் பாடி தான் எனது கெரியரை தொடங்கினேன். அதன் பின்னர் தான் பல பாடல்களை பாடி முன்னணி பாடகியாக மாறினேன். ஆனால் இப்போது வெளிவரும் எந்த பாடல்களும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அண்மையில் தான் “ஓ சொல்றியா மாமா” பாட்டை கேட்டேன்.
புது வாழ்க்கைக்கு தயாரான நடிகை மீனா., மகளிர் தினம் அதுவுமா, வெளியிட்ட முக்கிய அட்வைஸ்!!
அதெல்லாம் ஒரு பாடலா? தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஒரே மாதிரி இருந்தது. இசையமைப்பாளர்கள் வார்த்தைகளை கவனித்து இசையமைக்க வேண்டும் .பாடகர்களுக்கு என்ன தெரியும். இசையமைப்பாளர்கள் சொல்லியபடி அவர்கள் பாடி விடுகிறார்கள். இதே பாடல் என்னிடம் வந்திருந்தால் பாதி வார்த்தைகளை மாற்ற சொல்லிருப்பேன் என்று கூறியுள்ளார்.