இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தின் போது, நடந்த விபத்து குறித்து ஒரு முக்கிய உண்மையை ஹரி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஹரி பேட்டி :
நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் குடும்பத் திரைப்படம் தாமிரபரணி. பிரபு, பானு, நதியா, விஜயகுமார், நாசர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின், ஷூட்டிங்கின் போது நடந்த மிகப்பெரிய விபத்து குறித்து ஹரி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, நல்ல தண்ணி தீவுக்கு விஷாலை தேடி பானு செல்வது போல் ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும். அப்படி நடுக்கடலில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கும் போது, இதை வேடிக்கை பார்க்க 60 பேர் ஒரு Boatல் வந்திருந்தனர். அப்போது திடீரென, அந்த Boat கடலில் கவிழ்ந்தது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(04.03.2023) – முழு விவரம் உள்ளே!!
10க்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர் வரை தண்ணீரில் விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. பின்பு எனது டீமில் இருந்த மீனவர்கள் தான், கடலில் குதித்து அவர்களை காப்பாற்றினார்கள். இப்போது வரை அந்த சம்பவத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நல்லவேளை யாருக்கும் அப்போது ஒன்றும் ஆகவில்லை என ஹரி உருக்கத்துடன் பேசி உள்ளார்.