இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது. இதனால் கட்டாய வெற்றியை நோக்கி இரு அணி வீரர்களும் பலப்பரீட்சையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்திய மண்ணில் 18 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் கூறுகையில், “இம்முறை இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள பல திட்டங்களை வகுத்துள்ளோம். மேலும் நாங்கள் எதிர்பார்த்தது போலவே நாக்பூர் ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் உள்ளதால் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
இந்திய அணியை பொறுத்தவரை அஸ்வின் அதிக நெருக்கடியை தருவார் என நம்புகிறேன். மேலும் இப்போட்டியில் ஹெசல்வுட் விளையாடாதது எங்கள் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. இருந்தாலும் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் அதிரடி ஆட்டம் வெளிப்படும்.” என தெரிவித்துள்ளார்.