நடிகர் அஜித்குமார் அடுத்து நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் விலகியதை குறித்து தயாரிப்பாளரிடம் நயன்தாரா சமரசம் பேசியதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஏகே 62 :
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடித்த துணிவு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இதுவரை இந்த திரைப்படம் உலக அளவில் 220 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்ததாக துணிவு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் பின்னர் உறுதியாக விக்கி தான் எடுக்க போகிறார் என்றும் அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் விக்கியோட கதை லைக்கா தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காததால், ஏகே 62 படத்தை மகிழ் திருமேனியிடம் சென்றுள்ளது. இதனால் சோகத்தில் ஆழ்ந்த விக்கிக்கு பலரும் நியாயம் கேட்டனர்.
தளபதி 67-இல் களமிறங்கும் பிரபல இயக்குனர்.., அப்போ பெரிய சம்பவமே இருக்கு!!
இந்த நிலையில் விக்கியின் மனைவியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரிப்பு நிறுவனத்திடம் சமரசம் பேச சென்றுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விக்கியை தூக்கிட்டு மகிழ் திருமேனியிடம் படத்தை ஒப்படைத்த தயாரிப்பாளரிடம் தனது கணவன் விக்கிக்காக நயன்தாரா பேசி பார்த்தார். ஆனால் நயன் எவ்வளவு சொல்லியும் லைக்கா நிறுவனம் இறங்கி போகவில்லை என்று கூறப்படுகிறது.