நவீன தொழில்நுட்ப நிறுவங்களின் வளர்ச்சியால் பல்வேறு இயற்கை சீரழிவுகள் ஏற்படுகிறது. அதன்படி சென்னை மாநகர கூவம் ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்பட்டதால் பொதுமக்களும் கழிவுநீர் கால்வாயாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் அறிஞர் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் நிதி ஒதுக்கி பராமரிப்பு பணிகள் மேற்கொண்டனர். ஆனால் இதுபோன்ற திட்டங்களால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்தியாவின் 603 நதிகளின் மாசு குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டது.
பணத்திற்காக சொந்த அண்ணனை தலைகீழாக கட்டி தொங்க விட்ட தங்கை., போலீஸ்க்கு பயந்து தலை மறைவு!!!
இதில் அதிக மாசடைந்த ஆறாக சென்னையின் கூவம் ஆறு இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடையாறு ஆறு, பவானி, பாலாறு, தாமிரபரணி உட்பட 9 ஆற்றுப்படுகைகள் மிகவும் மாசடைந்தவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.