கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பில் வெளியாக இருக்கும் முதல் திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது IPL போட்டிகளில் விளையாடி வரும் தோனி தனது சம்பாத்தியத்தை சினிமாவில் முதலீடு செய்வதாக அறிவித்தார். அதற்கான முதற்கட்ட வேலைகள் சமீபத்தில் துவங்கியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
‘தோனி என்டர்டையின்மெண்ட்’ என்ற பெயரில் தோனி தயாரிக்கப்போகும் முதல் திரைப்படம் தமிழ் மொழியில் இருக்கும் என சொல்லப்பட்டது. இந்த படத்தை ரமேஷ் தமிழ் மணி இயக்க இருக்கிறார். இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தோனி தயாரிக்கவுள்ள முதல் திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் குடும்பத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.., அவரே வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு!
அந்த வகையில், நாளை மதியம் 12 மணியளவில், தோனி இயக்கம் புதிய திரைப்படத்தின் டைட்டில், நடிகர் மற்றும் நடிகைகளை பற்றிய விவரங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை குஷியாக்கி இருக்கிறது. ஏற்கனவே, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற வீரர் ஹர்பஜன் சிங், முதல் முதலாக ‘பிரென்ட்ஷிப்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.