இந்திய சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர் என எக்கச்சக்க திறமைகளுடன் திரையுலகில் தற்போது முக்கிய நட்சத்திரமாக உருவெடுத்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் இதற்கு முன்பு சின்னத்திரையில் பல வருடங்களாக ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் பிறகு இவரின் கடின உழைப்பினால் மெரினா, 3, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் இவர் மாவீரன், அயலான் போன்ற படங்களுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை செய்துள்ளார்.
சுந்தர்.சி பட பிரபலம் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அதில் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இந்த நாள் எங்களுக்கு சிறந்த நாளாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது அக்கா கௌரி இன்று சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிறந்த மருத்துவராக பணியாற்றியதற்காக தமிழக அரசால் விருது பெற்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவரது அக்காவுக்கு அவரின் மனமார்ந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.