சினிமாவில் சண்டை நடன இயக்குனராக இருந்து வந்த ஜூடோ கே கே ரத்தினம் இறந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூடோ கே கே ரத்தினம்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் கடந்த 1966ம் ஆண்டு வல்லவன் ஒருவன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக நுழைந்தார். அதன் பின்னர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர்களில் மூத்த கலைஞராக இருந்து வந்து விக்ரம் தர்மா ,சூப்பர் சுப்பராயன் , தளபதி தினேஷ் , ஜாகுவார் தங்கம் , ராம்போ ராஜ்குமார் , FEFSI விஜயன் , பொன்னம்பலம் ஆகியோரை வளர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் சுந்தர் சி நடிப்பில் கடந்த 2006ம் மானுட வெளியான தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்தார். இதை தொடர்ந்து 90 வயதுகளை கடந்த இவர் சமீப காலமாக உடல்நிலை சரி இல்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
24 மணி நேரமும் உழைக்கும் ஊழியர்கள் தேவை., zomato அறிவிப்பால் பணியாளர்கள் குழப்பம்!!
இந்த நிலையில் சண்டை நடன இயக்குனர் ஜூடோ கே கே ரத்தினம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உடல்நலம் குறைவால் சண்டை நடன இயக்குனர் ஜூடோ கே கே ரத்தினம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவரின் இறப்பாள் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.