இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக விளங்கி வருபவர் தான் முகேஷ் அம்பானி. இவருக்கு நீடா என்ற மனைவியும், ஆனந்த் அம்பானி என்ற மகனும் இருக்கிறார். இதில் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த், தற்போது ரிலையன்ஸ் எரிசக்தி வணிகத்தை வழிநடத்துகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சமீபத்தில் இவருக்கும் என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சண்ட் மற்றும் ஷைலா மெர்ச்சண்ட் ஆகியோரின் மகளான ராதிகா மெர்ச்செண்ட் என்பவருக்கும் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ஆண்டிலா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மூக்கு வழி கொரோனா தடுப்பூசி.., இந்தியாவில் இன்று தொடக்கம்.., சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!!
மேலுன் அந்த விழாவில் இருவரும் அணிந்த ஆடைகள் அனைவராலும் பேசப்பட்டது. இந்த நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்செண்ட் குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சமீபத்தில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்செண்ட் நிச்சயதார்த்த முடிவடைந்த நிலையில், தற்போது திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை ஜோடியாக தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.