நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெய்லர் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் திரைப்படம்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை வில்லனாக தொடங்கி, அதன் பிறகு ஸ்டைலிஷ் ஹீரோவாக தற்போது வரை இருந்து வருபவர் தான் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புஷ்பா பட பிரபலம் சுனிலும் இணைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகின.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அண்மையில் படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆனது.மேலும் இதற்கு முன்னர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால், தற்போது இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிரியமே வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் இப்படத்தை குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் கூறி வந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் பணிகள் தொய்வு காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருப்பதால், ஜெயிலர் திரைப்படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.