வேலையில்லா இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு.., உதவித்தொகை குறித்து வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!!!

0
வேலையில்லா இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு.., உதவித்தொகை குறித்து வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!!!
வேலையில்லா இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு.., உதவித்தொகை குறித்து வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!!!

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க போட்டித் தேர்வுகள், தனியார் வேலைவாய்ப்பு முகாம் என பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த உதவித்தொகையை பெற விரும்பும் இளைஞர்கள் 40 வயதிற்கு மிகாமலும், குடும்ப வருமானம் ரூ.72,000க்கும் மிகாமல் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. இவ்வாறு தகுதி உடைய இளைஞர்கள் அடையாள அட்டை, கல்வி, வருமான சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை 100% முடித்த முதல் மாவட்டம் இதுதான்., வெளியான அறிவிப்பு!!

மேலும் விண்ணப்பித்த இளைஞர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். அதாவது 9, 10ம் வகுப்பு தோல்வியாளர்கள்- ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சி- ரூ.300, 12ம் வகுப்பு தேர்ச்சி- ரூ.400, பட்டதாரிகளுக்கு- ரூ.600 ம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here