ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். இந்நாளில் தலைநகர் டெல்லியில் இந்திய ராணுவ அணிவகுப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் இவ்விழாவில் முக்கிய தலைவர்கள் பங்கு பெறுவதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
எனவே விமான நிலையம், ரயில் நிலையம், கோவில் போன்று மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது தலைநகர் டெல்லிக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பார்சல் சேவைகளை இன்று (ஜனவரி 23) முதல் ஜனவரி 26ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு அடுத்த ஷாக்., பணி நீக்கத்தை அறிவித்த spotify.,செலவுகளை குறைக்க முடிவு!!
ஆனால் செய்தித்தாள் மற்றும் நாளிதழ்கள் போன்றவை செல்ல எந்தவித தடைகளும் இல்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு காரணமாக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.