நடிகர் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
துணிவு திரைப்படம்:
தமிழ் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடித்த துணிவு திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் போனிகபூர் மற்றும் வினோத் கூட்டணியில் அஜித் நடித்த 3 வது திரைப்படமான துணிவு வசூல் மன்னனாக இருந்து வருகிறது. அஜித்தின் மாறுபட்ட நடிப்பும், சோசியல் மெசேஜ் மற்றும் ஆக்க்ஷன் கலந்த திரைப் படமாக உருவாகியுள்ள இந்த படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியானது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது வரை இந்த திரைப்படம் தமிழ் நாட்டில் 80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உலகளவில் 119 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது துணிவு திரைப்படம். இந்த நிலையில் துணிவு திரைப்படம் குறித்து இணையத்தில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் சேர்ந்து நடித்த துணிவு திரைப்படம் குறித்த விவாதம் பிரெஞ்சு தனியார் சேனல் ஒன்றில் நடந்துள்ளது.
ஜோதிகாவுக்காக சூர்யா செய்த காரியம்., காண்டான வீட்டார்! இது என்ன கொடுமையா இருக்கு!!
அது எதற்கு என்றால், பிரெஞ்சு மொழியில் மற்ற படங்களுக்கு இருந்த வரவேற்பை விட துணிவு திரைப்படம் தொடர்ந்து திரையரங்கில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரெஞ்சு நாட்டில் அஜித் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று அந்த விவாத மேடையில் பேசப்பட்டது. இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் வைரலாக பரப்பி வருகின்றனர்.