உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை அடுத்து, விவசாயி ஒருவர் செய்த செயல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
மெஸ்ஸி:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர், கோடிக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பில் கடந்த மாதம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின், இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணிக்கு எதிராக அர்ஜென்டினா அணியானது டை பிரேக்கரில் 4-2 என்ற கோல் கணக்கில் அசத்தலான வெற்றி பெற்றது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால், மெஸ்ஸின் அர்ஜென்டினா அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பையை தட்டி சென்றது. இந்த வெற்றியை அர்ஜென்டினா நகரமே திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். உலக கோப்பைக்கு பிறகு மெஸ்ஸி தான் ஓய்வு பெறப் போவதாக முன்பு அறிவித்ததையடுத்து, இவரது விவசாய ரசிகர் ஒருவர், தனது வயலில் மெஸ்ஸிக்காக செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, அர்ஜென்டினாவின் மத்திய கோர்டோபா மாகாணத்தில் உள்ள லாஸ் காண்ட்ரோஸில் விவசாயி கார்லோஸ் ஃபரிசெல்லி, தனது சோள வயலில், 124 ஏக்கர் பரப்பளவில் மெஸ்ஸின் உருவத்தை உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன் பயிரிட்டு உள்ளார். தற்போது இந்த பயிர்கள் வளர்த்து, மெஸ்ஸின் உருவத்தை தெளிவாக காட்டி உள்ளது. இது குறித்து, கார்லோஸ் ஃபரிசெல்லி, அர்ஜென்டினாவின் வெற்றியை விவசாயத்தின் மூலம் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளேன் என்று கூறியுள்ளார்.