நடிகர் விக்ரம் பிரபு நடித்து வரும் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படம் குறித்து முக்கிய செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு:
தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படம் மூலம் திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் விக்ரம் பிரபு. அதை தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். அதேபோல் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரலாற்று கதையை தழுவி எடுத்திருந்தால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது விக்ரம் பிரபு கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கும் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
காதல், ரொமான்ஸ்-க்கு குட் பை .., ரூட்டை மாற்றிய கீர்த்தி சுரேஷ்..,புது படத்தின் போஸ்டர் வெளியீடு!!
அதாவது விக்ரம் பிரபு மற்றும் வாணி போஜன் சேர்ந்து நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படம் மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதன் படி தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.