அஜித்குமார் ரசிகர் பரத் இறந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு ரசிகர் இருந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துணிவு திரைப்படம்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர் மன்றம் இல்லாமலே பல கோடி பேரை கைக்குள் வைத்திருக்கும் நட்சத்திரம் என்றால் அது அஜித் குமார் தான். தற்போது ஹச். வினோத் மற்றும் போனி கபூருடன் மூன்றாவது முறையாக சேர்ந்து துணிவு திரைப்படம் உருவாகியது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியானது. பொதுவாக அஜித் படம் என்றாலே ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருவார்கள்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை தொடர்ந்து படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாட முடியாத அளவிற்கு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் பர்ஸ்ட் டே ஷோவில் பரத் என்ற இளைஞன் உயிர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு அஜித் ரசிகர் இருந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
நயன் விக்கி தம்பதிக்கும், DDக்கும் இப்படி ஒரு Relationship இருக்கா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!!
அதாவது தூத்துக்குடியை சேர்ந்த தீவிர அஜித் ரசிகர் வீரபாகு என்பவர் மதுபோதையில் தனது குடும்பத்துடன் சேர்ந்து துணிவு படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் குடித்திருந்தால் அங்கே இருந்த பவுன்சர்கள் உள்ளே விடாமல் குடும்பத்தினர் முன்னிலையில் அசிங்கம் படுத்தியுள்ளார். அதை தாங்க முடியாமல் வீரபாகு வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.