மகளிருக்கான முத்தரப்பு தொடரில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
IND W vs SA W:
தென் ஆப்பிரிக்காவில் சர்வதேச மகளிருக்கான உலக கோப்பை டி20 தொடர் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு, தயாராகும் வகையில், இந்திய மகளிர் அணியானது, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக முத்தரப்பு தொடர்களை விளையாட திட்டமிட்டிருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன்படி, நேற்று முதல் தொடங்கப்பட்ட இந்த முத்தரப்பு தொடரில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில், மந்தனா (7), ஹர்லீன் தியோல் (8), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (0) என தொடர்ந்து ஏமாற்றினார்.
தோல்வி பக்கமே திரும்பாத மும்பை அணி…, இந்தியன் சூப்பர் லீக்கில் எதிரணியை மிரள வைத்து அசத்தல்!!
ஆனால், யாஸ்திகா பாட்டியா (35), தீப்தி சர்மா (33), அமன்ஜோத் கவுர் (41*) சிறிது நிலைத்து நின்று விளையாடினர். இதன் மூலம், 20 ஓவர் முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்திருந்தது. இந்த இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்திய அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.