நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஏகே 62 :
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்து உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதுபோக மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, அமீர் மற்றும் பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி உலக அளவில் வெளியானது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 150 கோடி வசூலை தாண்டி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வட அமெரிக்காவில் துணிவு திரைப்படம் 1 மில்லியன் டாலர்களை வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் படைப்பில் உருவாகியிருக்கும் ஏகே 62 படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவன் படைப்பில் உருவாக இருக்கும் ஏ கே 62 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் குஜராத் மற்றும் மும்பை பகுதிகளில் ஷூட்டிங் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் அஜித்துக்கு ஹீரோயின் ஆக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக கூறி வந்த நிலையில், தற்போது நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.