உலக நாடுகளில் கொரோனா ஒமிக்ரான் BF.7 தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் இந்த புதிய வகை வைரஸால் நாளுக்கு நாள் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதனால் உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா தற்போது 2ம் இடத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படியாக அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளிகள் மற்றும் பயணங்களில் முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ், தடுப்பூசி போன்றவை கட்டாயம் என வலியுறுத்தி வருகிறது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதில் குளறுபடி., மொத்தமும் delete ஆயிடுச்சு! வெளியான ஷாக் நியூஸ்!!
இதைத்தொடர்ந்து சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் கென்யாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த நாமக்கல்லை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த இளைஞர் தற்போது வீட்டு தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.