எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு மேலும் ஆவலை தூண்டும் விதமாக இப்பொழுது சக்தியும் ஜனனியும் ஒன்று சேரவுள்ளனர். அதற்கான காட்சிகள் தான் இப்பொழுது இடம் பெற்று வருகிறது.
ஜனனி சக்தியை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா?? இல்லையா?? என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர். இப்படி இருக்க சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கூட சக்தியும், ஜனனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த முக்கிய அறிவிப்பு இப்பொழுது வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது குணசேகரனுக்கு அடுத்தடுத்து அடி மேல் அடி விழுந்து கொண்டே இருப்பதால் சற்று அப்செட்டாகி தான் உள்ளார். அதுபோக ஆதிரையின் காதல் விவகாரம் வேறு பெரிதாக போய்க்கொண்டுள்ளது. இப்பொழுது சக்தி ஜனனியிடம் வாழ தயாராகி, ஒட்டுமொத்தமாக பிரிந்து வந்து விடுவாராம். ஆதிரையும் கரிகாலனை கல்யாணம் செய்து வைத்து விடுவார்களோ என்ற பயத்தில் வீட்டை விட்டு ஓடி விடுவாராம். இதனை வைத்து தான் இனி வரும் எபிசோடுகள் நகரவுள்ளது.