நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
துணிவு திரைப்படம்:
கோலிவுட் வட்டாரங்களில் ரசிகர் மன்றமே இல்லாமல் எண்ணற்ற ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் தான் துணிவு. இந்த கூட்டணியில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் படு மொக்கையாக இருந்தால், ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை தந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதனால் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர், பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது. மேலும் நாளைக்கு படம் வெளியாக இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களை சோகத்தில் மூழ்கடிக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது புதுச்சேரியில் நாளை அதிகாலை 1 மணியளவில் வெளியாக இருந்த துணிவு படம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் காலை 5 மணி ஆட்டத்துக்கு செல்லலாம் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு விட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.