வட்டி உயர்வு, உலக வர்த்தக வளர்ச்சி சரிவு போன்ற காரணங்களால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் உள்ளது. இதனால் பாகிஸ்தான், இலங்கை, ரஷ்யா போன்ற நாடுகளில் மக்களுக்கு வழங்க கூடிய உணவு பொருள், கல்வி என கடும் தட்டுப்பாடுக நிலவுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இளைஞர்களிடையே வேலையில்லாத திண்டாட்டம் வலுப்பெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு முதல் போதுமான உணவுப்பொருட்கள் சேமித்து வைக்காததால் பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை சந்தையில் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது.
சுமார் ரூ.13 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்.., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!!
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அரசு குறைந்த விலையில் கோதுமை வழங்குவதாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மலிவு விலையில் கிடைக்கும் கோதுமையை வாங்க மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.