தமிழ் சினிமாவை திருப்பி போட்ட படம் என்றால் அது பிரசாந்த் நீல் இயக்கிய KGF பார்ட் 1& 2 தான். இந்த படத்தில் ஹீரோவாக கன்னட திரையுலகில் முன்னணி ஹீரோ யாஷ் நடித்து அசத்தியிருப்பார். மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் 1000 கோடி வசூல் செய்து இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படி இருக்கையில் சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் KGF பார்ட் 3 படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு தொடங்கும் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்படி இருக்கையில் இப்படம் குறித்து நடிகர் கிஷோர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கன்னட மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தாவது, விஜய்யாவது எப்பவும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.., பிக்பாஸ் பிரபலம் பேட்டி!!
இவர் சமீபத்தில் “எனக்கு கேஜிஎப் போன்ற படங்கள் பிடிக்காது. நான் இன்னும் இரண்டாம் பாகத்தைப் பார்க்கவில்லை” எனவும், மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ஆதரிக்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து, நான் கூறியது சரியா,தவறா என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இவர் கூறிய தகவல் கன்னட திரையுலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.