சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடர், சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இந்த தொடரில் நடித்த நாயகி பிரியங்கா, தனது புதிய சீரியல் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதிய பதிவு:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட பல எபிசோடுகளை கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த தொடர் திடீரென முடிவுக்கு வந்தது. தற்போது இந்த சீரியலுக்கு பதிலாக, இனியா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ரோஜா சீரியல் முடிவுக்கு வந்ததால், இந்த சீரியலில் நடித்த ரசிகர்களின் ஃபேவரைட்டான அர்ஜுன்-ரோஜா ஜோடியை பலரும் மிஸ் செய்வதாக கருத்து பதிவிட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, ரோஜா தொடரில் நடித்த பிரியங்கா நல்கரி, புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
நோயாவது மண்ணாவது., புதுப்பொலிவுடன் மீண்டு வந்த சமந்தா – அவரே போட்ட முக்கிய பதிவு!!
திருமணமான ட்ரெடிஷனல் லுக்கில், இவர் போட்டோ பதிவிட்டுள்ளதால் ஒருவேளை அவர் நடிப்பது ரோஜா சீரியல் சீசன் 2 வாக இருக்குமோ? என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.