கோலிவுட் சினிமாவில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, கோமாளி, டெடி, லாபம் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் நடிகை பிரவீனா. தற்போது இவர் நடித்த வாத்தி திரைப்படம் அடுத்த மாதம் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் வெள்ளித்திரை மட்டுமின்றி தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் அம்மா கதாபாத்திரங்களிலும் பிரவீனா நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சமீபத்தில் அவருடைய புகைப்படங்களை மாப்பிக் செய்ததாக புகார் கொடுத்த நிலையில், 23 வயதுடைய பாக்யராஜ் என்பவரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாக்கியராஜ் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் தற்போது மீண்டும் அந்த பாக்யராஜ் என்ற இளைஞரின் மீது ஒரு குற்றம் சாட்டியுள்ளார்.
அதாவது பாக்கியராஜ் என் மீதும் மற்றும் எனது குடும்பத்திற்கு எதிராக தமிழக இளைஞர் சைபர் தாக்குதல் நடத்துவதாக புகார் அளித்துள்ளார். மேலும் தனது மகளை பாக்கியராஜ் குறி வைத்து, எனது மகளின் பெயரில் சில அக்கவுண்ட்களை ஓபன் செய்து அவதூறு பரப்பி வருகிறார். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த போது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிரவீனா வருத்தமடைந்துள்ளர்.