பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தன் குடும்பத்தை பிரிந்து வந்து கோபியுடன் இருந்து வந்த நிலையில் இன்று புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது
பாக்கியலட்சுமி சீரியல்:
பாக்கியாவை விட்டு கோபியுடன் இனியா இருந்து வரும் நிலையில் ராதிகா இனியாவிடம் அப்பப்போ பேச ட்ரை பண்ணுகிறார். ஆனா அதுக்கு எல்லாம் பிடி கொடுக்காமல் இனியா அவங்கள அவாய்ட் செய்கிறார். அதுக்கு ராதிகா இனியா, ஏன் என்கிட்ட பேச பிடிக்கலையா என கேட்க இனியா, ஏன் அப்பாகாக மட்டும்தான் இங்க இருக்கேன். உங்க கிட்ட பேசணும் எனக்கு எந்த அவசியமும் இல்லைன்னு மூஞ்சில அடிச்ச மாறி சொல்லிவிடுகிறார். அதுக்கு ராதிகா, உனக்கு இந்த சின்ன வயசுல இவ்வளவு ஆட்டிட்யூட் இருக்கக் கூடாதுன்னு திட்டுகிறார்.
உடனே கோபி ராதிகா கிட்ட சின்ன பொண்ணுக்கு சரி சமமா பேசி சண்டை போடுறனு கேட்க, அதுக்கு ராதிகா ஆமா என் மேல தான் எல்லா தப்பும் இருக்கு, உங்க வீட்ல இருக்கிற எல்லாரும் என்ன திட்டுறாங்க. இப்போ இவளும் என்ன திட்றானு சொல்லி சண்டை போடுகிறார். கோபியும், ராதிகாவும் சண்டை போடுவதை பார்த்த மயூ அப்செட் ஆகி பயந்து போய் நிற்கிறார்,
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதுக்கு கோபி ஒன்றும் இல்லைடா செல்லம் சும்மா அம்மா பேசிட்டு இருக்காங்க நீ எதுவும் நினைக்காதன்னு சொல்லிட்டு உட்கார வைக்கிறாரு. அதுக்கு ராதிகா மயூவை இங்க வான்னு கூப்பிடுகிறார். பின் கோபி ரொம்ப டென்ஷன் ஆகி தலையில கை வச்சு உட்கார்ந்திருக்கிறார். இதன் பிறகு ராதிகா செயலால் கண்டிப்பாக இனியா பாக்கியாவிடம் சென்று விடுவார் என்று தான் தெரிகிறது. எனவே அடுத்து வரும் எபிசோட்களில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.