தமிழகத்தின் மூன்று மாவட்டங்களுக்கு, வரும் திங்கட்கிழமை சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுக்கான புதிய திட்டம் ஒன்றை துவக்கி வைக்க உள்ளார்.
புதிய திட்டம்:
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு, பல புதிய திட்டங்களை சமீப காலமாக செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு வழியாக, வரும் 28ஆம் தேதி திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.
யூத் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப்.., தங்கப் பதக்கங்களை குவித்த இந்திய இளம் வீரர்கள்!!
இந்த சுற்றுப்பயணத்தில், திருச்சியில் உள்ள பாப்பா குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் “ஸ்டெம் ஆன் வீல்ஸ்” என்ற புதிய திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலம், தன்னார்வலர்கள் பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் போன்ற பாடங்களுக்கான கற்றல் முறையில் அவசியத்தை எடுத்துரைக்கலாம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த திட்டத்தை துவக்கி வைத்த பின், பெரம்பலூர் கோத்தாரி சர்க்கரை ஆலை மற்றும் எறையூர் சிப்காட் தொழிற்சாலை போன்றவற்றை துவக்கி வைக்க உள்ளார். இதையடுத்து, அரியலூர் மாவட்ட மாளிகை மேட்டில் 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை நேரில் பார்வையிட உள்ளார்.