தமிழகத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
பொதுவாக ஒவ்வொரு வருடமும் பட்டப்படிப்பு முடித்து எக்கச்சக்க மாணவ மாணவியர்கள் கல்லூரியை விட்டு வெளியே வருகின்றனர். அவர்களுக்கு எல்லோருக்கும் வேலை கிடைத்துவிடுமா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான். இதனால் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் கா.சண்முகசுந்தர் வேலைவாய்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது மதுரையில் இருக்கும் கோ. புதூர் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை(25.11.2022) பிரபல தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்ந்தெடுக்க இருக்கின்றனர்.
தமிழகத்தில் நாளை மின்தடை (25.11.2022) – எந்தெந்த பகுதின்னு உடனே செக் பண்ணிக்கோங்க?
மேலும் இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்த மாணவர்கள் நாளை காலை 10 மணிக்கு நடக்க இருக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் மற்றும் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று துணை இயக்குநர் கா.சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.