T20 போட்டிகளில் ரிஷப் பந்த் இந்த இடத்திற்கு தான் சரிப்பட்டு வருவார்…, தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!!

0
T20 போட்டிகளில் ரிஷப் பந்த் இந்த இடத்திற்கு தான் சரிப்பட்டு வருவார்..., தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!!
T20 போட்டிகளில் ரிஷப் பந்த் இந்த இடத்திற்கு தான் சரிப்பட்டு வருவார்..., தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக உள்ள தினேஷ் கார்த்திக், டி20 போட்டிகளில் ரிஷப் பந்த் இந்த இடத்திற்கு தான் சரியானவராக இருப்பார் என கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்:

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில், ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் என இரு விக்கெட் கீப்பர்களும் இடம் பெற்று இருந்தனர். ஆனால், இந்த இரு வீரர்களில் தினேஷ் கார்த்திக் தான் பிளேயிங் லெவனில் முதல் விருப்பமாக இருந்தார். இவருக்கு உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது முதுகு வலி ஏற்பட்டதால், கடைசி நேரத்தில் மைதானத்தை விட்டு வெளியேறி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் பிறகு தான் ரிஷப் பந்துக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவ்வாறு ரிஷப் பந்த் 2 வது தேர்வாக இருந்ததற்கு காரணம், இவர் டி20 போட்டிகளில் பினிஷராக சரிவர செயல்படாமல் இருந்தது தான். இந்த பினிஷர் என்ற பொறுப்பை உலக கோப்பைக்கு முன் தினேஷ் கார்த்திக் கச்சிதமாக செய்ததால் தான் அணியில் இடம் பிடித்தார்.

உலக கோப்பையை வெல்லததால் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு…, புது தேர்வுக் குழுவை உருவாக்க திட்டமா?? என்னென்ன தகுதிகள்…, முழு விவரம் உள்ளே!!

இந்நிலையில், ரிஷப் பந்த் குறித்து தினேஷ் கார்த்திக், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் (50 ஓவர்) போட்டிகளில் இவர் தனது இடத்தை சிறப்பாக தக்க வைத்துக் கொண்டுள்ளார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இடது கை பேட்ஸ்மேன்னான ரிஷப் பந்த் டி20 போட்டிகளை பொறுத்தவரையில், தொடக்க வீரராக முன்பு சிறந்து விளங்கினார். ஆனால், சில போட்டிகளில் தடுமாறினாலும், அதிகபட்ச போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடி கொடுத்துள்ளார் என கூறி, இவருக்கு ஓப்பனிங் தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here