தமிழகத்தில் வருகிற ஜனவரி 10ஆம் தேதிக்குள் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என ஸ்டாலின் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிரடி முடிவு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பயனர்களுக்கு வழங்கப்பட உள்ள வேட்டி சேலைகளின் தரம் மற்றும் தேதி ஆகியவை குறித்த கூட்டம், முதல்வர் தலைமையில் முக்கிய அதிகாரிகள் முன் நடைபெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது இந்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. அதாவது வருகிற ஜனவரி 10ஆம் தேதிக்குள், பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் பெத்தவங்கள மதிக்கலையா?? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஏ.சி!!
இதுபோக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது போல் பெண்களுக்கு 15 புதிய டிசைன்களில் சேலையும், ஆண்களுக்கு 5 வித்தியாச டிசைன்களில் வேட்டியும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பு, கேட்டு ரேஷன் கார்டு தாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.