நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனியார் சேனல் நடத்திய பேட்டி ஒன்றில் அஜித்தை குறித்து பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
நடிகர் அஜித்குமார்:
திரைத்துரையில் டாப் நடிகர்களின் பட்டியலில் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில் , டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ரசிகர்களின் ஆரவாரத்தில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இப்படத்தினை தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை பெற்ற ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தின் ஓனர் உதயநிதி சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தொகுப்பாளர் ஒருவர் உதயநிதியிடம்,அஜித் சாருக்கும் உங்களுக்கு உள்ள நட்பை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “அஜித் சார் எங்கே எப்போது பார்த்தாலும் பாசமாக பேசுவார். அவர் நம்ம கிட்ட நடந்து கொள்கிற முறையை பார்த்தால் வியப்பாக இருக்கும்.
அதிரடி முடிவை கையில் எடுத்த ட்விட்டர் ஊழியர்கள்.,, நவம்பர் 21 வரை அலுவலகங்கள் மூடல்!!
இதை பல பேர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். மேலும் அவர் Presence நமக்கு ஒருவர் பாசிட்டிவிட்டியைத் தரும். இப்பேற்பட்ட மனிதனின் படத்தை நான் வெளியிடுவதில் பெருமை படுகிறேன். அதுமட்டுமின்றி ரசிகர்கள் போலவே நானும் படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.