TNPSC குரூப்-1 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு.,, முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0
TNPSC குரூப்-1 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு.,, முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
TNPSC குரூப்-1 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு.,, முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டி தேர்வு குறித்து TNPSC முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குரூப்-1 தேர்வு:

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள முதல் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு நாளை (19.11.2022) நடைபெற உள்ளது. இந்த தேர்வு துணை ஆட்சியர், டி.எஸ்.பி, வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 92 பணியிடங்களுக்கு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதை தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று tnpsc சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் குரூப் 1 தேர்வு காரணமாக மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் தேர்வு மையங்களாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது கடந்த மாதம் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடு செய்யும் விதமாக நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கமாக செயல்பட உள்ளது.

அஜித்தின்” Presence “நமக்கு பாசிட்டிவ் தரும்.., பேட்டியில் புகழ்ந்து தள்ளிய உதயநிதி!!

இந்நிலையில் குரூப் 1 முதல்நிலை போட்டி தேர்வுக்காக பள்ளிகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளிகள் நாளை இயங்காதா? அல்லது குரூப் 1 முதல்நிலை போட்டி தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ள நிலையில் குரூப்-1 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here