நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சிறந்த வீரரை தேர்ந்தெடுக்கும் பரிந்துரை பட்டியலில், இந்திய வீரர்கள் இருவர் இடம் பிடித்துள்ளனர்.
சிறந்த வீரர்:
டி20 உலக கோப்பை தொடர் 16 அணிகளுக்கிடையே தொடங்கப்பட்டு, தகுதி சுற்றுகள், சூப்பர் 12 மற்றும் அரையிறுதி என கடந்து தற்போது, இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த இறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் மைதானத்தில் மோத உள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இறுதிப் போட்டிக்கு 2 நாட்களே உள்ள நிலையில், ஐசிசியானது, நடப்பு உலக கோப்பை தொடரில் சிறந்து விளங்கிய வீரரை தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கியுள்ளது. தற்போது ஐசிசியானது 9 வீரர்களை தேர்வு செய்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், யார் வெற்றியாளர் என்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஐசிசி ரசிகர்களிடம் கொடுத்துள்ளது.
ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்: பதக்கங்களை சுட்டு குவிக்கும் இந்திய வீரர்கள்!!
இந்த பட்டியலில், இந்தியாவின் விராட் கோஹ்லி 296 ரன்கள் மற்றும் சூர்யகுமார் யாதவ் 239 ரன்களுடன் முதலிரண்டு இடத்தில் உள்ளனர். இவர்களை தொடர்ந்து, பாகிஸ்தானின் ஷதாப் கான், ஷஹீன் அப்ரிடி, இங்கிலாந்தின் சாம் கர்ரன், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா மற்றும் இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த டி20 உலக கோப்பை தொடரில் கடந்த 2014 மற்றும் 2016 ஆண்டுகளில் விராட் கோஹ்லி சிறந்த வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.