இஸ்ரேலில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
டென்னிஸ் அப்டேட்
டெல் அவிவ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் இஸ்ரேல் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது கால் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா – மாட்வே மிடில்கூப் ஜோடி, பிராங்கோ ஸ்குகோர் மோல்ச்சனோவ் ஜோடியை எதிர்கொண்டனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த இரு ஜோடிகளுக்கு இடையில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய ஜோடி 4-6, 7-6, 10-5 என்ற செட் கணக்கில் குரோஷியா ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர். இதனை தொடர்ந்து இந்திய ஜோடி அரையிறுதி ஆட்டத்தில் எஃப். ஸ்குகோர், மோல்ச்சனோவ் ஜோடியை எதிர்கொள்ள உள்ளனர்.
ஆனால் இந்த அரையிறுதி ஆட்டத்தில் போபண்ணா, மிடில்கூப் ஜோடி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த ஜோடி ஆரம்பத்தில் இருந்தே தொடர் வெற்றிகளை சந்தித்து வருவதால் கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.