வீரா படத்திற்கு பிறகு ரஜினியை தவிர்த்த இசைஞானி.., மொத்த காரணமும் அது மட்டும் தானாம்!!

0
வீரா படத்திற்கு பிறகு ரஜினியை தவிர்த்த இசைஞானி.., மொத்த காரணமும் அது மட்டும் தானாம்!!
வீரா படத்திற்கு பிறகு ரஜினியை தவிர்த்த இசைஞானி.., மொத்த காரணமும் அது மட்டும் தானாம்!!

இசைஞானி இளையராஜா ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் ரஜினியை மட்டும் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இசைஞானி இளையராஜா:

திரையுலகில் 80 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை இசையால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் தான் இசைஞானி இளையராஜா. இவர் எல்லா சூழ்நிலைக்கும் மெட்டுக்கள் போட்டுள்ளார். அவர் வாசிக்கும் ராகத்தில் மயங்காத ஆட்களே இருக்க முடியாது. தற்போது வரை கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பளாராக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் ரஜினியை விட கமல் படங்களுக்கு தான் அதிகம் இசை அமைத்து உள்ளார்.

நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான வீரா திரைப்படத்திற்கு பிறகு இளையராஜா அவருக்கு இசை அமைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் அந்த காலகட்டத்தில் நடிகர் ரஜினி மாஸ் ஹீரோவாக இருந்ததால், அவரின் படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு அதிக நேரம் செலவிட்டு மெட்டு போட வேண்டும். அந்த சமயத்தில் இளையராஜா படு பிசியாக இருந்ததால் ரஜினி படங்களில் இசையமைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கிடையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்தில் இசையமைக்க முதலில் இளையராஜாவிடம் தான் கேட்டுள்ளனர். அவர் மறுத்ததால் தான் பின்பு ஏ.ஆர்.ரகுமான் அப்படத்திற்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினி- இளையராஜா காம்போ எப்போது வருமென்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here