விஜய் டிவியில் ‘வந்தாள் மகாலக்ஷ்மியே’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மியை, இணையவாசிகள் என்னமா காப்பி அடிக்கிறீங்ளே என்று கலாய்த்து வருகின்றனர்.
மஹாலக்ஷ்மி:
சின்னத்திரையில், விஜேவாக வலம் வந்த மஹாலக்ஷ்மி சீரியலிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை 2வது திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த 5 நாட்களில் மகாபலிபுரம் ரெசாட்டிற்கு ஹனிமூன் சென்ற புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தில், தாலி சரடை வெளியில் தூக்கி போட்டு போஸ் கொடுத்திருந்தார். இதை பார்த்த இணையவாசிகள், ‘என்னமா நயன்தாரா மாறி ட்ரை பண்றீங்களா என்று பயங்கரமாக கலாய்த்து வந்தனர், ஏன் என்றால் நயன்தாராவும் திருமணத்திற்கு பிறகும் இப்படித்தான் தாலி சரடை வெளியில் போட்டு இருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் நயன்தாரா அவரது திருமணத்தில் போட்டு இருந்த உடை, நகைகள் மாதிரி, மஹாலக்ஷ்மியும் அணிந்து விஜய் டிவி ‘வந்தாள் மகாலக்ஷ்மி” நிகழ்ச்சிக்கு வந்து உள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘என்னமா மீண்டும் காப்பியா, நயன்தாராவின் மிகப்பெரிய ரசிகை போல நீங்க” என்று கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.