தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, செயல்படுத்தி வரும் திட்டங்களின் வரிசையில், அடுத்த வருடம் புதிய திட்டம் ஓன்று அமலுக்கு வர உள்ளது.
புதிய திட்டம்:
தமிழகத்தில் 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான நேரடி வகுப்புகள், கடந்த 13ம் தேதி பள்ளிகளில் தொடங்கின. மேலும் பள்ளி கல்வித்துறை, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் மாணவர்களை அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெற வைக்க வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை தொடர்ந்து அண்மையில், அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மற்றொரு சூப்பரான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதாவது அடுத்த கல்வியாண்டில், மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மருத்துவர்கள் அதிரடி ஸ்டிரைக் – குடும்பத்துடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம்! நோயாளிகள் அவதி!!
.மலை பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருவதால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த குளிரில் இருந்து, மாணவர்களை பாதுகாக்க அடுத்த கல்வியாண்டில் மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வாங்க அரசு ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது. அரசின் இத்திட்டத்தால் மலை வாழ் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.