மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பற்றி ஜெயம் ரவி சொன்ன சூப்பர் விஷயம் ஓன்று வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன்:
மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. தியேட்டர்களில் இப்படத்தின் டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்து வருகின்றன. இந்த படத்தில் ஏராளமான முக்கிய கதாபாத்திரங்கள் இருந்தாலும், படத்தின் நாயகன் ‘ஜெயம் ரவி’ தான். அவர் தற்போது முக்கியமான விஷயம் ஒன்றை மீடியாவிடம் ஷேர் செய்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது பொன்னியின் செல்வன் முதல் மற்றும் 2ம் பாகம் என மொத்தத்தையும் இயக்குனர் மணிரத்னம், 150 நாட்களில் எடுத்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த விஷயத்தை இயக்குநர் ராஜமெளலியிடம், ஜெயம் ரவி சொன்ன போது, அமர்ந்து இருந்த ராஜமெளலி ஒரு நிமிடம் எழுந்து, ‘எப்படி இது முடியும், என்ன சொல்றீங்க, எனக்கு பாகுபலி 1, 2 மற்றும் RRR படங்களை எடுத்து முடிக்க 5 வருடங்கள் ஆனது என்று ஆச்சரியமாக கேட்டாராம்.