இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டி குறித்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளை பார்க்கலாம்.
இந்தியா VS தென்னாப்பிரிக்கா
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெறும் T20 தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்த இரு அணிகளுமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஆட்டத்தில் கைதேர்ந்தவர்கள். இதனால் இன்று நடைபெறும் ஆட்டம் ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும் இந்திய அணியை எடுத்துக் கொண்டால், தற்போது தான் உலகின் NO 1 அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசுர பலத்தில் உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் அணியில் விராட் கோலி, ரோஹித், சூரியகுமார் போன்ற பேட்ஸ்மேன்களை வீழ்த்த தென்னாபிரிக்க பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலான விஷயமாக உள்ளது. மறுபுறம் தென்னாபிரிக்க அணியை பார்த்தால், இதுவரை டெஸ்ட் தொடர்களில் தோல்வியே சந்திக்காமல் வெற்றிகளை குவித்து வருகிறது.
இந்திய அணிக்கு கேப்டனாகும் சஞ்சு., தென்னாப்பிரிக்க தொடரில் ஏற்படும் மாற்றம்., ரசிகர்களை ஐஸ் வைக்கும் BCCI!!
மேலும் அந்த அணியில் உள்ள டெம்பா பவுமா (சி), குயின்டன் டி காக், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இதனால் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியின் முடிவில் எந்த அணி வெற்றி பெற போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.