தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IND VS SA
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான T20 தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டிகளை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையில் ஒரு நாள் தொடரும் நடைபெற உள்ளது. இந்நிலையில் T20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் வெளியிட வில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இந்த ஒரு நாள் தொடரில் பல முன்னணி வீரர்கள் இடம்பெற வாய்ப்பில்லை. இதனால் இந்த அணிக்கு துணை கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்க BCCI ஆலோசித்து வருகிறது. இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடவில்லை.
மேலும் அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்து A அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்திய அணி A வெற்றி பெற்றது. இதனால் கூட இவரை இந்திய மெயின் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கலாம் என தெரிகிறது. ஆனால் மறுபுறம் T20 உலக கோப்பை தொடரில் சஞ்சுவுக்கு இடம் கொடுக்கவில்லை. இதனால் தான், சஞ்சுவை துணை கேப்டனாக நியமித்து, அவரின் ரசிகர்களுக்கு BCCI ஐஸ் வைப்பதாக சிலர் அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.