தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு- சிவகார்த்திகேயன்:
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இதற்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளியது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர், டான் திரைப்படங்கள் 100 கோடியை அள்ளியது குறிப்பிடத்தக்கது. அதனால் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அதேபோல் நடிகர் சிம்பு படமும் நன்றாக ஓடி வசூல் வசூல் சாதனை படைத்து வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி 2 – விஜய்க்கு வில்லனாக களமிறங்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!
இதனால் இவரும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி கிட்டத்தட்ட 35 கோடியை சம்பளமாக கேட்கிறாராம். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனுக்கு கொடுப்பீங்க, எனக்கு தர மாட்டீங்களா என்று பேசி வருகிறாராம். இந்த சம்பவத்தால் நடிகர் சிம்பு சிவகார்த்திகேயனை தன்னுடைய போட்டியாளராக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.