பிரபல நடிகையை அவதூறாக பேசிய வழக்கு.., சினேகனை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!!

0
பிரபல நடிகையை அவதூறாக பேசிய வழக்கு.., சினேகனை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!!
பிரபல நடிகையை அவதூறாக பேசிய வழக்கு.., சினேகனை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!!

கோலிவுட்டில் பல பாடல்களை எழுதி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாடலாசிரியர் சினேகன். அந்த வகையில் கடைசியாக தி லெஜண்ட் படத்தில் எழுதிய வாடிவாசல் என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. அதே போல் சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கி வருபவர் தான் நடிகை ஜெயலட்சுமி. இவர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தது மட்டுமின்றி பாஜக மாநில மகளிர் அணி துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது வெளியான டைரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை காவல் நிலையத்தில் பாடலாசிரியர் சினேகன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளார். அதற்கடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஜெயலட்சுமி, பொது வீதியில் என்னை அவதூறாக பேசியது மட்டுமின்றி, நான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை தொடர்பாக காவல்துறையில் கடந்த மாதம் என் மீது புகார் அளித்துள்ளார்.

அன்றும் இன்றும் என்றும்’ நமக்கு இவங்க தான்.., மக்கள் மனதில் பலவருடமான நிலைத்த விஜய் டிவி!!

அவருடைய அறக்கட்டளை பெயரில் தான் நான் பணம் வசூலித்தேன் என்று பொய்யான ஒரு தகவலை பரப்பினார். இதனால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பாடலாசிரியர் சினேகன் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here