நாளை வெளியாக இருக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடலை இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நானே வருவேன் பாடல்:
மயக்கம் என்ன படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் பன்னிரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேனில் கைகோர்த்துள்ளார். இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் தியேட்டர்களில் அலைமோதி வருகின்றனர்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
மேலும் கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நானே வருவேனில் இடம் பெற்ற பாடல்கள் முழுவதுமாக வெளிவராமல் இருக்கும் நிலையில் தற்போது ஒரு பாடல் வெளியாகியுள்ளது.
நான் அதை பாக்குறவன் கிடையாது, என்ன நெனச்சாலும் எனக்கு கவலை இல்ல .., முக்கிய பிரபலத்தை வெளுத்து வாங்கும் கெளதம்!!
அதாவது சித் ஸ்ரீராம் பாடிய “பிஞ்சு பிஞ்சு மழை” என்ற பாடலை இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் வெளியான “ரெண்டு ராஜா” என்ற பாடலை நடிகர் தனுஷ் எழுதியது மட்டுமின்றி யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.